செய்திகள்
திருமங்கலத்தில் போலி நகை கொடுத்து மோசடி- 2 பேர் கைது
திருமங்கலத்தில் போலி நகை கொடுத்து நகைக்கடையில் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:
திருமங்கலம்- உசிலம் பட்டி சாலையில், ராதா கிருஷ்ணன் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இங்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வந்தனர். பழைய நகையை கொடுத்து புதிய கே.டி.எம். நகை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
கடை ஊழியர்கள் புதிய நகைகளை காட்டினர். பழைய நகைகளை பெற்றுக் கொண்டு புதிய நகைகளை கொடுத்தனர். அதன் பிறகு பழைய நகைகளை சோதித்த போது, அது போலி நகை என தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள், பல்வேறு இடங்களில் இது போன்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
சி.சி.டி.வி. கேமிரா பதிவு மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மதுரை சோலையழகுபுரம் கணேசன் மனைவி மீனாட்சி, ஜெய்ஹிந்துபுரம் ஆறுமுகம் மகன் சசிகுமார் (40) ஆகியோர் தான் மோசடியில் ஈடுபட்டவர்கள் என தெரியவர, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்- உசிலம் பட்டி சாலையில், ராதா கிருஷ்ணன் என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இங்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் வந்தனர். பழைய நகையை கொடுத்து புதிய கே.டி.எம். நகை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
கடை ஊழியர்கள் புதிய நகைகளை காட்டினர். பழைய நகைகளை பெற்றுக் கொண்டு புதிய நகைகளை கொடுத்தனர். அதன் பிறகு பழைய நகைகளை சோதித்த போது, அது போலி நகை என தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் போலி நகை கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள், பல்வேறு இடங்களில் இது போன்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
சி.சி.டி.வி. கேமிரா பதிவு மூலம் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். மதுரை சோலையழகுபுரம் கணேசன் மனைவி மீனாட்சி, ஜெய்ஹிந்துபுரம் ஆறுமுகம் மகன் சசிகுமார் (40) ஆகியோர் தான் மோசடியில் ஈடுபட்டவர்கள் என தெரியவர, இருவரும் கைது செய்யப்பட்டனர்.