செய்திகள்
தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
தருமபுரி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பழைய தருமபுரி எறங்காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதையன் (வயது55). விவசாயியான இவருக்கு திருமணமாகி காவேரியம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று மாதையன் காய்கறி வாங்குவதற்காக தனது மொபட்டில் தருமபுரிக்கு வந்தார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவர் கிருஷ்ணகிரி சாலையில் செல்லும்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாதையன் பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.