செய்திகள்
விளாங்குடியில் 11 1/2கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
போலீசார் அதிரடி சோதனை நடத்தி 11 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, 2 பேரை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை விளாங்குடி மந்தையம்மன் கோவில் தெருவில் சிலர் கஞ்சா பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அந்தப்பகுதிக்குச் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. தொடர்ந்து போலீசார் அந்தப்பகுதியைச் சோதனையிட்டனர்.
அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 11 1/2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து சிக்கந்தர் சாவடி குபேந்திரன் (வயது 42), அய்யங்கோட்டை பாலமுருகன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.