செய்திகள்

43,051 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து: சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2019-03-10 03:04 GMT   |   Update On 2019-03-10 03:04 GMT
தமிழகம் முழுவதும் 43,051 மையங்கள் மூலம் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. #Polio #PolioDrop
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டன.

சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.



அதன்படி இன்று காலை 7 மணிக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி தொடங்கியது. சென்னையில் முதல்வர் எடப்படி பழனிசாமி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உடனிருந்தார்.

Tags:    

Similar News