செய்திகள்

செங்கோட்டை அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2019-03-09 11:49 GMT   |   Update On 2019-03-09 11:49 GMT
செங்கோட்டை அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகமாக நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு இலத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது கணேசன் (வயது65) என்பவர் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1500 மதிப்புள்ள கேரள லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News