மின்சார ரெயிலில் பயணியை தாக்கி வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது
சென்னை:
சென்னை அருகே உள்ள மதுராந்தகத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகன் அபினேஷ் (20). சென்னையில் மின்சார ரெயிலில் பயணம் செய்த போது 3 வாலிபர்கள் அவரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
மேலும் செல்போன் டவர் மூலமும் ஆய்வு செய்ததில் வாலிபரை தாக்கி பணம் பறித்து சென்ற 3 பேர் பிடிப்பட்டனர்.
தட்சணாமூர்த்தி(22), சஞ்சய்(17), பூவரசன்(22) ஆகிய மூவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ரெயிலில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய வழிப்பறி திருடர்களை விரைவாக பிடித்த தனிப்படை போலீசாரை ரெயில்வே கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு, துணை தலைவர் பாலகிருஷ்ணன், கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ஆகியோர் பாராட்டினர்.