செய்திகள்

ஊத்துமலை அருகே வைக்கோல் படப்புக்கு தீவைத்த வாலிபர் கைது

Published On 2019-02-27 16:48 IST   |   Update On 2019-02-27 16:48:00 IST
ஊத்துமலை அருகே வைக்கோல் படப்புக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

ஊத்துமலை அருகே உள்ள கருவந்தா கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா (வயது61), விவசாயி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த முருகன் (31) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பிச்சையாவுக்கு சொந்தமான ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்தது. அந்த வைக்கோல் படப்புக்கு முருகன் தீவைத்ததாக, பிச்சையா ஊத்துமலை போலீசில் புகார் செய்தார்.

இதன் பேரில் ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

Tags:    

Similar News