செய்திகள்

புதுவை சட்டசபையில் 2-ந்தேதி இடைக்கால பட்ஜெட்

Published On 2019-02-25 08:47 GMT   |   Update On 2019-02-25 09:20 GMT
புதுவை சட்டசபை வருகிற 2-ந்தேதி கூடுகிறது. அன்றைய தினம் முதல்- அமைச்சரும், நிதித்துறை பொறுப்பு வகிப்பவருமான நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். #PuducherryAssembly #Narayanasamy
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என தெரிகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானால் மாதிரி நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும். இதனால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.

எனவே, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக வருகிற 2-ந்தேதி புதுவை சட்டசபை கூடுகிறது.


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயர் வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு சட்டசபை கூட்டத்தில் முதல்- அமைச்சரும், நிதித்துறை பொறுப்பு வகிப்பவருமான நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒரு நாள் மட்டுமே இந்த கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. #PuducherryAssembly
Tags:    

Similar News