செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்

Published On 2019-02-23 20:00 IST   |   Update On 2019-02-23 20:00:00 IST
வேலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு மாற்றங்கள் செய்து கொள்ள இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
வேலூர்:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு இன்றும் நாளையும் ஒரு வாய்ப்பாக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த இரண்டு நாட்களில், நிர்ணயிக்கப்பட்ட வாக்கு சாவடிகளில், வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்த்தல், நீக்கல், திருத்துதல் மற்றும் தொகுதிக்குள்ளே இடம் மாறுதல் உள்ளிட்ட மாற்றங்களை செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதற்குரிய படிவங்களை பெற்று நிரப்பி தர வேண்டும் என்றும், பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் 3453 வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் திருத்தம், பெயர் சேர்த்தல் உள்ளிடவற்றிற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். நாளையும் இந்த சிறப்பு முகாம் நடக்கிறது.

இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது. #tamilnews
Tags:    

Similar News