செய்திகள்

நாமகிரிப்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு: தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமி மீட்பு

Published On 2019-02-21 21:54 IST   |   Update On 2019-02-21 21:54:00 IST
நாமகிரிப்பேட்டையில் அதிகாரிகள் நடத்திய ஆய்வின் போது, தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமியை மீட்டனர்.
நாமக்கல்:

தொழிலாளர் உதவி ஆய்வாளர் சுதா தலைமையில் நாமகிரிப்பேட்டை பகுதியில் குழந்தை தொழிலாளர் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமி மீட்கப்பட்டார்.

பின்னர் அந்த சிறுமியை கலெக்டர் ஆசியா மரியம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து கலெக்டர் அந்த சிறுமியை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலமாக குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த கூட்டாய்வில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் அந்தோணி ஜெனிட் மற்றும் திட்ட களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். இது போன்ற ஆய்வுகள் தொடரும் என்று தொழிலாளர் உதவி ஆய்வாளர் சுதா கூறினார்.
Tags:    

Similar News