செய்திகள்
வேலை செய்ய முடியாத விரக்தியில் தொழிலாளி தற்கொலை
பாகூர் அருகே காலில் அடிபட்டதால் வேலை செய்ய முடியாத விரக்தியில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
பாகூரை அடுத்த அரங்கனூர் நிர்ணயப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 47).இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
தனசேகருக்கு வேலை செய்யும் போது காலில் அடிபட்டது. இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மது பழக்கத்துக்கு அடிமையானார்.
இந்த நிலையில் நேற்று தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்று மன வருத்தத்தில் இருந்த தனசேகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாரதி பாகூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் பாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.