செய்திகள்
மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் உதவி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
மின்சாரம் தாக்கி பலியான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று பேசியதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குப்பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் மின் கம்பம் நடும் பணிக்கு, அவ்வழியே சென்று கொண்டிருந்த, மாரிமுத்து மகன் சரவணன் என்பவரை அழைத்து, அப்பணியினை மேற்கொண்டிருந்த போது, எதிர் பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சரவணனின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று பேசியதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம், வடக்குப்பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காத்தலிங்கம் மின் கம்பம் நடும் பணிக்கு, அவ்வழியே சென்று கொண்டிருந்த, மாரிமுத்து மகன் சரவணன் என்பவரை அழைத்து, அப்பணியினை மேற்கொண்டிருந்த போது, எதிர் பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சரவணனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சரவணனின் குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #TNCM #Edappadipalaniswami