செய்திகள்

அயனாவரம் அருகே டாக்டரை தாக்கி செல்போன் பறிப்பு

Published On 2019-02-13 06:31 GMT   |   Update On 2019-02-13 06:31 GMT
அயனாவரம் அருகே டாக்டரை தாக்கி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ். டாக்டர். இவர் நேற்று இரவு காரில் ஐ.சி.எப். மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காரை இடித்தனர். இதில் லோகேசுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் லோகேஷ் காரை எடுத்துக்கொண்டு சென்றார். அயனாவரம் சிக்னலில் கார் நின்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் லோகேசை தாக்கி ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து லோகேஷ் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

Tags:    

Similar News