செய்திகள்
ஒண்டிப்புதூரில் என்ஜினீயர் வீட்டில் 7½ பவுன் நகை கொள்ளை
ஒண்டிப்புதூரில் என்ஜினீயர் வீட்டில் 7½ பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32). என்ஜினீயர். இவரது மனைவி பிரியலட்சுமி. சம்பவத்தன்று கார்த்திகேயன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு நெகமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இன்று அதிகாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடையந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 7½ பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் கொள்ளைபோனது தெரியவந்தது.
இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.