செய்திகள்

எட்டயபுரத்தில் மினி லாரி மோதி பெண் பலி

Published On 2019-02-03 18:58 IST   |   Update On 2019-02-03 18:58:00 IST
எட்டயபுரத்தில் தண்ணீர் பிடித்து வந்த பெண் மீது மினி லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள இலம்புவனத்தை சேர்ந்தவர் சவுந்தரய்யா. இவரது மனைவி மாசானபேச்சி (வயது 36). இவர் இன்று அதிகாலை அப்பகுதியில் உள்ள எட்டயபுரம்-கோவில்பட்டி சாலையில் தண்ணீர் பிடித்து கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது விளாத்தி குளத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி பால் ஏற்றிச் சென்ற மினி லாரி எதிர் பாராத விதமாக மாசான பேச்சி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீசார் மாசான பேச்சி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மினி லாரியை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் வீரகேரபள்ளம் புதூரை சேர்ந்த இளையபெருமாள் மகன் மாரிச்செல்வம் (27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News