செய்திகள்

வாலாஜா அருகே கார் மோதி பால் வியாபாரி பலி

Published On 2019-02-03 15:43 IST   |   Update On 2019-02-03 15:43:00 IST
வாலாஜா அருகே கார் மோதிய விபத்தில் பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலாஜா:

வாலாஜா அடுத்த தேவதானம் பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் ரகு (26). இவர்கள் இருவரும் நேற்று இரவு ஜெ.ஜெ. நகரில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகு படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.

இது குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News