செய்திகள்

அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும்- திட்டக்குடியில் திருமாவளவன் பேட்டி

Published On 2019-01-28 17:20 GMT   |   Update On 2019-01-28 17:20 GMT
கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #JactoGeo #TeachersProtest

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அரசு நிர்வாகத்துக்கு முதுகெலும்பாக உள்ளவர்கள் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான். அவர்கள் முடக்கப்பட்டால், அரசு நிர்வாகம் முடங்கி விடும்.

எனவே அவர்களை கைது செய்யும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #JactoGeo #TeachersProtest

Tags:    

Similar News