செய்திகள்

பாரத ரத்னா விருதுக்கு தேர்வான பிரணாப் முகர்ஜிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

Published On 2019-01-26 10:36 GMT   |   Update On 2019-01-26 12:26 GMT
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
சென்னை:

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவித்தார். மேலும் சமூக சேவகர் நானாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பிரணாப் முகர்ஜி கூறுகையில், நாட்டு மக்களுக்கு நன்றி என்றார்.



இந்நிலையில், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைசிறந்த அரசியல் மேதையான பிரணாப் முகர்ஜி நம் நாட்டுக்காக தன்னலமின்றி சேவையாற்றினார் என குறிப்பிட்டுள்ளார். #PranabMukherjee #BharatRatna #EdappadiPalanisamy
Tags:    

Similar News