செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2019-01-25 04:42 GMT   |   Update On 2019-01-25 04:43 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் லேசான மழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #MetturDam
சேலம்:

கடந்த 23-ந் தேதி 71 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மேலும் அதிகரித்து 131 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 254 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 1,250 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று 71.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 71.71 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
 
Tags:    

Similar News