செய்திகள்
காசிமேட்டில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்
மீன் பிடிக்க சென்ற மீனவர் எதிர்பாராதவிதமாக காணாமல் போன சம்பவம் குறித்து கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
சென்னை:
புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த 21-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார்.
கடந்த 22-ந் தேதி 15 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராமலிங்கம் கடலில் தவறி விழுந்தார். படகில் இருந்த மற்ற மீனவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
ராமலிங்கம் கிடைக்காததால் நேற்று இரவு அவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பினர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் உதவியுடன் கடலில் மாயமான ராமலிங்கத்தை தேடிவருகின்றனர். #tamilnews
புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் கடந்த 21-ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 4 மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார்.
கடந்த 22-ந் தேதி 15 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ராமலிங்கம் கடலில் தவறி விழுந்தார். படகில் இருந்த மற்ற மீனவர்கள் அவரை மீட்க முயன்றும் முடியவில்லை.
ராமலிங்கம் கிடைக்காததால் நேற்று இரவு அவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பினர். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதி மீனவர்கள் மற்றும் கடலோர காவல்படையினர் உதவியுடன் கடலில் மாயமான ராமலிங்கத்தை தேடிவருகின்றனர். #tamilnews