செய்திகள் (Tamil News)

முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் மதுரை காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

Published On 2019-01-22 13:17 GMT   |   Update On 2019-01-22 13:17 GMT
முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மதுரையை சேர்ந்த காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
முதுகுளத்தூர்:

மதுரை மாடக்குளத்தை சேர்ந்தவர் சோனை மகன் வெற்றிச்செல்வம் (வயது25), இவரும் வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதியை சேர்ந்த தனுஷ்கோடி மகள் சுஷ்மிதாவுக்கும் (23) கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சம்பவத்தன்று காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது.

பின்னர் மதுரை மாடக்குளம் அய்யனார் கோவிலில் வெற்றிச்செல்வம், சுஷ்மிதா திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் வெற்றிச் செல்வத்தின் அம்மா பிறந்த ஊரான முதுகுளத்தூர் அருகே கீழக்கன்னிசேரிக்கு சென்றனர். அங்கு தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு, முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் அவர்கள் தஞ்சமடைந்தனர்.

முதுகுளத்தூர் போலீசார் இருவரின் பெற்றோர்களை அழைத்து, சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. #tamilnews
Tags:    

Similar News