செய்திகள்
தேர்வில் தோல்வி- பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
பொள்ளாச்சியில் தேர்வில் தோல்வி அடைந்ததால் பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
பொள்ளாச்சி பொங்காளியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அருண்குமார் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் அருண்குமார் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அருண்குமார் விஷத்தை குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அருண்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.