செய்திகள்
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் கடத்திய மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மரக்காணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 474 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் சென்னை கல்லடிப்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 38) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு மரக்காணம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 474 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர் சென்னை கல்லடிப்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 38) என்பதும், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.