செய்திகள்

திண்டுக்கல்லில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன்

Published On 2019-01-20 13:05 GMT   |   Update On 2019-01-20 16:21 GMT
திண்டுக்கல்லில் வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன். அவரது மனைவி சாவித்திரி (வயது 60). இவர் தினசரி அதிகாலை நேரத்தில் வாக்கிங் சென்று வருவது வழக்கம்.

அதன்படி இன்று சாவித்திரி வாக்கிங் சென்றார். ஏ.எம்.சி. சாலையில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மர்ம நபர் வந்தார். அவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம நபர் சாவித்திரி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து நகர் வடக்கு பகுதி போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News