செய்திகள்

நிலக்கோட்டை பகுதியில் தண்ணீர் இன்றி வாடும் நெற்பயிர்

Published On 2019-01-19 09:12 GMT   |   Update On 2019-01-19 09:12 GMT
நிலக்கோட்டை பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி, சித்தர்கள் நத்தம், மேட்டுப்பட்டி, விளாம்பட்டி, பிள்ளையார்நத்தம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் வைகை அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரை நம்பி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெற்பயிர்களை 2-ம் போகமாக சாகுபடி செய்தனர்.

அப்படி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வைகை அணையிலிருந்து வராத காரணத்தால் தற்போது நெற்பயிர்கள் வாடும் தருவாயில் உள்ளது.

எனவே தமிழக அரசு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நிலக்கோட்டை பேரணை உதவி செயற்பொறியாளர் தளபதி கூறுகையில் அரசு தரப்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஓரிரு நாட்களில் விவசாய பயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News