செய்திகள்

ஸ்டெர்லைட் வழக்கில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து வைகோ அப்பீல்

Published On 2019-01-07 09:27 GMT   |   Update On 2019-01-07 09:27 GMT
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து இன்று உச்சநீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார். #SterliteProtest #Vaiko

சென்னை:

ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையினால் காற்று, நீர், நிலம் மாசுபடும் என்றும், அதனால் அப்பகுதி மக்களின் உடல்நலனுக்கு பெருங்கேடு விளையும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நீதிமன்றங்களிலும், மக்கள் மன்றத்திலும் கடந்த 22 ஆண்டுகளாக பொது மக்கள் நலனுக்காக போராடி வருகிறார்.


 

இந்தநிலையில் கடந்த 15.12.2018 அன்று டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை எதிர்த்து இன்று உச்சநீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #Vaiko

Tags:    

Similar News