செய்திகள்

திருத்தங்கல்லில் பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

Published On 2018-12-31 09:09 GMT   |   Update On 2018-12-31 09:09 GMT
திருத்தங்கல்லில் பெண்ணிடம் 13 பவுன் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்:

திருத்தங்கல் அரசு ஆஸ்பத்திரி சாலையில் வசிப்பவர் ரமேஷ். இவரது மனைவி பாண்டிச்செல்வி (வயது34).

ரமேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். குழந்தைகளுடன் வசித்து வந்த பாண்டிச்செல்வி, ஆலமரத்துப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார்.

அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்ட பாண்டிச் செல்வி, திருத்தங்கல் -விருதுநகர் சாலையில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின்னால் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பாண்டிச்செல்வியின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அங்குள்ள சோதனை சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களை போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் 13 பவுன் நகை இருந்தது தெரியவந்தது. அது பாண்டிச்செல்வியிடம் இருந்து பறித்தது என அவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சங்கரன்கோவில் பாரதி நகரைச் சேர்ந்த முத்துமாரி (25), மாரிராஜ் (26) என தெரியவந்தது.

Tags:    

Similar News