செய்திகள்

சாத்தூர் அருகே வேன் மோதி விபத்து: பாதயாத்திரை சென்ற பக்தர் பலி

Published On 2018-12-31 09:05 GMT   |   Update On 2018-12-31 09:05 GMT
பாதயாத்திரை சென்ற தொழிலாளி வேன் மோதி மகன் கண் முன்பே பரிதாபமாக இறந்தார்.

சாத்தூர்:

சிவகாசி நாரணாபுரம் ரோட்டை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 42) கட்டிடத் தொழிலாளி. இவர் தனது மகனுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக குழுவினருடன் நேற்று புறப்பட்டார். நள்ளிரவு சாத்தூர் ஓடைப்பட்டி வந்த பாதயாத்திரை குழுவினர் அங்குள்ள விநாயகர் கோவிலில் தங்கினர். இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

சுப்புராஜ் தனது மகனுடன் நடந்து சென்றனர். சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டியபட்டி விலக்கில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டெம்போ வேன் எதிர் பாராத விதமாக சுப்புராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட சுப்புராஜ் ரத்த வெள்ளத்தில் மகன் கண் முன்பே பரிதாபமாக இறந்தார். சுப்புராஜ் உடலை பார்த்து மகன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

விபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தி சென்ற வேன் டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த கருப்பையா என்பவர் கோவில்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

Tags:    

Similar News