செய்திகள்
கந்தர்வக்கோட்டையில் விபத்தில் தச்சு பட்டறை அதிபர் பலி
கந்தர்வக்கோட்டையில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தச்சு பட்டறை அதிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை புதுநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செந்தில்குமார் (வயது 35). அதேபகுதியில் தச்சு பட்டறை நடத்தி வந்தார். தினமும் பைக்கில் வேலைக்கு சென்றுவருவது வழக்கம். அதேபோல் நேற்றும் பட்டறைக்கு சென்றுவிட்டு, இரவு பணி முடிந்ததும் வீடு திரும்பினார்.
கந்தர்வக் கோட்டை - தஞ்சாவூர் சாலை பழைய கந்தர்வக்கோட்டை அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் உடடியாக வந்து, செந் தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மர்ம வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த செந்தில் குமாருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளது.