செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-12-23 12:34 GMT   |   Update On 2018-12-23 12:34 GMT
கோவையில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியம் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். ஹரிஹரசுப்பிரமணியத்துக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடடனர். 

அதன்பிறகு மனவருத்தத்தில் காணப்பட்ட இவருக்கு குடும்பத்தினர் மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் சரியான வரண் அமைய வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News