செய்திகள்
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம் - தமிழிசை தாக்கு
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு கம்யூனிஸ்டுகளே காரணம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். #Tamilisai #BJP
சென்னை:
பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சியினர் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளார்கள்.
சென்னையில் பட்டாசுக்கு எதிராக போராடுகிறார்கள். அதேநேரத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள்.
பட்டாசுக்கு எதிராக பிரசாரம் செய்த ஜபருல்லா மற்றும் கம்யூனிஸ்டுகளே சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க காரணம். தொழிலாளர்களே ஆதரவாளர்கள் யார்? விரோதிகள் யார்? என்பதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilisai #BJP
பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினையில் கம்யூனிஸ்டு கட்சியினர் இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளார்கள்.
சென்னையில் பட்டாசுக்கு எதிராக போராடுகிறார்கள். அதேநேரத்தில் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்கள்.
பட்டாசுக்கு எதிராக பிரசாரம் செய்த ஜபருல்லா மற்றும் கம்யூனிஸ்டுகளே சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க காரணம். தொழிலாளர்களே ஆதரவாளர்கள் யார்? விரோதிகள் யார்? என்பதை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilisai #BJP