செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-12-20 09:27 GMT   |   Update On 2018-12-20 09:27 GMT
திருக்கழுக்குன்றம் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயமானதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பவானி (20). காதல் கணவருடன் அதே பகுதியில் வாழ்ந்து வந்தார்.

இவருக்கு 2 வயதில் ரஷ்வந்த் என்ற மகன் உள்ளான். கடந்த 10-ந்தேதி மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. திருக்குழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News