செய்திகள்

மதுரையில் 3 மாத குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-12-17 12:10 GMT   |   Update On 2018-12-17 12:10 GMT
3 மாத குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை:

மதுரை தத்தனேரி வ.உ.சி. நகரைச் சேர்ந்த வீரமணி மனைவி சித்ரா (வயது37). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே 10 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் சித்ராவுக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு 3 மாத கைக் குழந்தை உள்ளது.

இதனால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சித்ராவை ஏளனமாக பேசினார்கள். இதனால் மனவேதனை அடைந்த சித்ரா நேற்றிரவு வீட்டில் தீக்குளித்தார். உடலில் பற்றிய தீ 3 மாத குழந்தை மீதும் பரவியது.

சித்ரா உடல் முழுவதும கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய குழந்தையும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News