செய்திகள்

காசிமேட்டில் கப்பல் ஊழியரிடம் கத்திமுனையில் பணம்-செல்போன் பறிப்பு

Published On 2018-12-15 09:18 GMT   |   Update On 2018-12-15 09:18 GMT
காசிமேட்டில் கப்பல் ஊழியரிடம் கத்திமுனையில் பணம்-செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

காசிமேடு அமராஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜெலஸ்டின் ஜோஷ்யன்.

இவர் பாரிமுனையில் உள்ள கப்பல் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று கம்பெனி வேலையாக எண்ணூர் சென்றார்.

நள்ளிரவு 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் காசிமேடு எக்ஸ்யூஸ் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கும்பல் அவரை வழி மறித்தது.

ஜெலஸ்டின் நின்றதும் அவரிடம் கத்தியை காட்டி, பணம், செல்போன் ஆகியவற்றை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெலஸ்டினை கத்தியால் தாக்கி, அடித்து உதைத்தனர்.

அவரிடம் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், 5 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர்.

இதற்குள் வழிப்பறி கும்பலை சேர்ந்தவர்கள் ஜெலஸ்டின் மோட்டார் சைக்கிள் மீது கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர். காயம் அடைந்த ஜெலஸ்டின் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறி கும்பலை தேடி வருகிறார்கள். இந்த பகுதியில் போலீசார் இரவு ரோந்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News