செய்திகள்

பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்த காதல் ஜோடி கோர்ட்டில் தஞ்சம்

Published On 2018-12-14 10:27 GMT   |   Update On 2018-12-14 10:27 GMT
வில்லியனூர் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி பதிவு திருமணம் செய்த காதல் ஜோடி இன்று புதுவை கோர்ட்டில் தஞ்சம் அடைந்தனர்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் அபிராமி (வயது 19). இவர் பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான தினேஷ்குமார்(25) என்பவரும் காதலித்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் இந்த காதலுக்கு அபிராமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டை விட்டு வெளியேறிய அபிராமி தனது காதலன் தினேஷ்குமாருடன் சென்று கடலூரில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அபிராமி தனது காதல் கணவர் தினேஷ்குமாருடன் இன்று காலை புதுவை கோர்ட்டில் தஞ்சம் அடைந்தார். ஏற்கனவே அபிராமியின் பெற்றோர் தங்களது மகள் மாயமானதாக போலீசில் புகார் தெரிவித்து இருந்ததால் நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News