செய்திகள்
அணை பாதுகாப்பு மசோதாவில் உடனடியாக தலையிட வேண்டும் - முதல்மந்திரி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்
தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவில் உடனடியாக தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல் மந்திரி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். #DamSafetyBill #EdappadiPalaniswami #PMModi
சென்னை:
பாராளுமன்ற மக்களவை தொடரில் தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018 நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தமிழக முதல் மந்திரி எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தேசிய அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா 2018-ல் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். தமிழக நலன் குறித்து அணை பாதுகாப்பு மசோதாவில் கருத்தில் கொள்ளப்படவில்லை.
அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக தமிழகம் வைத்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப் பெறவேண்டும்.
மாநிலங்களின் கருத்துக்களை கேட்காமல் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த மசோதவால் ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால் அந்த அணையின் உரிமை பறிபோகும் என தெரிவித்துள்ளார். #DamSafetyBill #EdappadiPalaniswami #PMModi