செய்திகள்

கம்பத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வியாபாரி போக்சோவில் கைது

Published On 2018-12-12 04:46 GMT   |   Update On 2018-12-12 04:46 GMT
கம்பத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது39). பப்பாளி வியாபாரி. இவரது தோட்டத்திற்கு காவலுக்கு வந்த குடும்பத்தில் 14 வயது சிறுமியும் இருந்தார்.

சிவக்குமார் அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் சிறுமியுடன் வி‌ஷம் குடித்தார்.

2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். தற்போது சிறுமி நலமாக உள்ளார். மேலும் சிவக்குமார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிவக்குமாரை கம்பம் வடக்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Tags:    

Similar News