செய்திகள்

மணப்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-08 22:13 IST   |   Update On 2018-12-08 22:13:00 IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டியலில் திருச்சி மாவட்டத்தை சேர்க்கவும், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளையும் பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணப்பாறை:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டியலில் திருச்சி மாவட்டத்தை சேர்க்கவும், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளையும் பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி திருச்சி மாவட்டம்,  மணப்பாறையில் உள்ள பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் தங்கராசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  

புறநகர் மாவட்டச் செயலாளர் இந்திரஜி, துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்டக்குழு தட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் உசேன், ஒன்றியச் செயலாளர்கள் சண்முகானந்தம், வெள்ளக்கண்ணு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர். 

இதைத் தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை, புளியமரம், மாமரம், எலும்பிச்சை, தேக்கு, வேப்பமரம்,  பப்பாளி, வாழை மற்றும் பல்வேறு விலை உயர்ந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும், முறையாக புள்ளி விபரக்கணக்கை எடுக்க வேண்டும், விவசாய பயிர்களாக நெல், காய்கனி, மலர், பாகற்காய், புடலங்காய் உள்ளிட்டவைகளும், அதற்காக அமைக்கப்பட்ட பந்தல்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கிட வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூபாய் 5 லட்சம்  மதிப்பீட்டில் கான்கீரிட் வீடுகள் கட்டித் தர வேண்டும், மணப்பாறை, மருங்காபுரி தாலுகா பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அவிறிக்க வேண்டும், தரமான மின்கம்பங்கள் நட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி கண்டன கோசங்கள் எழுப்பினர்.
Tags:    

Similar News