செய்திகள்

இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும்- ஈஸ்வரன் பேட்டி

Published On 2018-12-08 14:17 GMT   |   Update On 2018-12-08 14:17 GMT
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஈஸ்வரன் கூறியுள்ளார். #eswaran #DirectorRanjith

கோவை:

கோவையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார், யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளது.

அம்பேத்கார் உருவ படம் முன்பாக இளைஞர்கள் சில சமுதாய பெண்களை கொச்சை படுத்தி பேசியது அச்சமுதாயத்தினை கொதிப்படைய செய்துள்ளது.


திரைப்பட இயக்குநர் ரஞ்சித் தேச தந்தை காந்தி இல்லை எனவும், அம்பேத்கர் என்றும் பேசுகிறார். கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா இயக்குநர் ரஞ்சித் சினிமா பாணியில் பேசுகிறார். அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் அவரை கைது செய்ய வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய அளவில் கலவரம் உருவாகி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது.

மேகதாது அணை விவகாரத்தில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை உடன் வைத்து போராடுவது சங்கடமான வி‌ஷயம். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு கர்நாடகா அரசியல் தான் முக்கியம்.

மேகதாது பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது. அவர் கர்நாடக பிரதிநிதிகள் யாரையும் சந்திக்க கூடாது. நீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #eswaran #DirectorRanjith

Tags:    

Similar News