சென்னிமலை அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து நகைகள் கொள்ளை
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த ஈங்கூர் பகுதியில் உள்ளது சி.எஸ்.ஐ. காலனி. இங்கு வசிப்பவர் தனபாக்கியம் (65) இவரது கணவர் சாமுவேல், கடந்த 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் தனபாக்கியம் அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனபாக்கியம் சென்று விட்டார்.
நேற்று மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியானார். வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 5½ பவுன் தாலிக்கொடி, 1 பவுன் மோதிரம் ஒன்று ½ பவுன் மோதிரம் ஒன்று மற்றும் ½ பவுன் தோடு திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தனபாக்கியம் தகவல் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வரு கிறார்.