செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே கார் மோதி தம்பதி படுகாயம்

Published On 2018-12-05 11:01 GMT   |   Update On 2018-12-05 11:01 GMT
ஜோலார்பேட்டை அருகே கார் மோதி தம்பதி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

ஏலகிரி நிலாவூரை சேர்ந்தவர் பாபு (வயது 30). இவரது மனைவி செல்வி (27). இவர்கள் நேற்றிரவு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

கோடியூர் என்ற இடத்தில் பைக் சென்ற போது எதிரே வந்த கார் மோதியது. இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கிவீசபட்டு படுகாயமடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News