செய்திகள்
வேப்பேரி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது
வேப்பேரி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை நகரில் அடிக்கடி வாகன திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. சென்னை வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் திருட்டு போயின. இதுதொடர்பான புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்தநிலையில் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டதாக வடபழனி அஜித்குமார், சீனிவாசன், சந்தோஷ், ஏழுமலை ஆகிய 4 பேரை வேப்பேரி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.