செய்திகள்

பல்லாவரம் அருகே பெண் கொலை வழக்கு: 2 வாலிபர்கள் கைது

Published On 2018-12-01 08:46 GMT   |   Update On 2018-12-01 08:46 GMT
பல்லாவரம் அருகே பெண் கொலை வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் ஓட்டல் வைத்து இருந்தவர் மனோன்மணி (54). இவருடைய ஓட்டலில் திருச்சியை சேர்ந்த இளையராஜா (26). திருவண்ணாமலையை சேர்ந்த சீனிவாசன்(25) ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 27-ந்தேதி 2 வாலிபர்களும் மனோன்மணியை கொலை செய்து விட்டு 15 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இவர்களை சங்கர்நகர் போலீசார் தேடிவந்தனர். இன்று இளையராஜா, சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News