செய்திகள்

கெலமங்கலம் பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு துப்புரவு முகாம்

Published On 2018-11-30 13:48 GMT   |   Update On 2018-11-30 13:48 GMT
கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ராயக்கோட்டை:

தருமபுரி மண்டலம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் அறிவுரைக்கிணங்க, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் சுகாதார பணியாளர்கள், மஸ்தூர் பணியாளர்கள், மருத்துவ சுகாதார பணியாளர்கள் மற்றும் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு பேரூராட்சியில் தீவிர துப்புரவு முகாம் நடத்தப்பட்டது.

இதில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜீஜாபாய், செயல் அலுவலர் சேம்கிங்ஸ்டன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News