செய்திகள்

வேலூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு

Published On 2018-11-28 17:22 GMT   |   Update On 2018-11-28 17:22 GMT
வேலூரில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர்.

வேலூர்:

வேலூர் தியாகராஜ புரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 35). நேற்று இரவு இவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்த வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ராஜலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர்.

இதனால் திடுக்கிட்ட ராஜலட்சுமி கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News