செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள்

Published On 2018-11-26 17:58 GMT   |   Update On 2018-11-26 17:58 GMT
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வாகனங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
தேவகோட்டை:

கஜா புயலால் தமிழகத்தில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக மாவட்டத்தில் காரைக்குடி, சிங்கம்புணரி, எஸ்.புதூர் உள்பட பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்படைந்தன. இந்த பகுதிகளில் புயலால் சாய்ந்த மரங்கள், மின்கம்பங்கள் போன்றவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் உள்ளிட் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமமடைந்து வருகின்றனர்.

இதையடுத்து பல்வேறு அமைப்புகள் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தேவகோட்டையில் இருந்து 3 லாரிகள், மினி வேன்களில் அனுப்ப ஏற்பாடுகள் செய்திருந்தார்.

நிவாரணப்பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்கள் ஆலங்குடி, திருமயம் உள்பட மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த வாகனங்களை அமைச்சர் பாஸ்கரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் அரிசி, பிஸ்கட், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, சீனி, ரவை ஆகிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இவற்றை தொகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் தளக்காவயல் பிர்லா கணேசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் தசரதன், அரசு வழக்கறிஞர் ராமநாதன், ஆவின் சேர்மன் அசோகன், கே,பி,ராஜேந்திரன், தேவகோட்டை முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சுந்தரலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் போஸ், ரமேஷ், சுப்பிரமணியன், கண்டதேவி ஆறுமுகம், முத்துராமலிங்கம், துரைராஜ் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்றனர்.
Tags:    

Similar News