செய்திகள்

திருநள்ளாறில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

Published On 2018-11-24 10:10 GMT   |   Update On 2018-11-24 10:10 GMT
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
காரைக்கால்:

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தெற்கு வீதி, பஸ் நிறுத்தம், கடைவீதி உள்பட பல இடங்களில், சிலர் பணம் வைத்து சூதாடி வருவதாக மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மற்றும் போலீசார் இந்த பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது பணம் வைத்து சூதாடிய திருநள்ளாறு கந்தபழனிவேல், குணா, ராஜா, மகேஷ், பிரதீப், தாமரை, உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 சீட்டுக்கட்டு மற்றும் ரூ.19 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News