செய்திகள்

பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது

Published On 2018-11-21 14:29 GMT   |   Update On 2018-11-21 14:29 GMT
மத்தூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முனிர். இவரது மகள் முபினா (வயது16). இவர் மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மாணவி முபினா மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் முனிர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் முபினாவை தேடினர். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்க வில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தந்தை முனிர், அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தனது மகள் முபினாவை கடத்தி சென்றிருக்கலாம் என்று மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பள்ளி மாணவி முபினா மற்றும் சிலம்பரசனை தேடி வந்தனர். அப்போது சிலம்பரசன் முபினாவை கடத்தி சென்று ராயக்கோட்டை பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக தெரியவந்தது. போலீசார் முபினாவை மீட்டு சிலம்பரசனை கைது செய்தனர்.
Tags:    

Similar News