செய்திகள்

மூலக்கடையில் ஆக்கிரமித்து கட்டிய ஓட்டலுக்கு சீல் வைப்பு

Published On 2018-11-20 10:06 GMT   |   Update On 2018-11-20 10:06 GMT
மூலக்கடை பகுதியில் ஆக்கிரமித்து கட்டிய ஓட்டலுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாதவரம்:

மூலக்கடை பகுதியில் இடத்தை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி அந்த கடை வாடகைக்கு விடப்பட்டது.

இந்த இடம் அரசுக்கு சொந்தமான குளம் இருந்த பகுதி என கூறப்படுகிறது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கொண்டதாகவும் இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதாக இந்த கட்டிடத்தை காலி செய்ய பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தனிநபர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு ஆக்கிரமித்து கட்டியுள்ள கட்டிடத்தில் ஓட்டலை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது.

அதன் பேரில் மாநகராட்சி மாதவரம் 3-வது மண்டல அதிகாரி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ராமமூர்த்தி, சதீஷ்குமார், பாபு போலீஸ் உதவி கமி‌ஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி இதில் இயங்கி வந்த ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.


Tags:    

Similar News