செய்திகள்
செஞ்சி அருகே அரசு பஸ் பெண் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
செஞ்சி:
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி லட்சுமி(வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை செஞ்சி அருகே அரசலாபுரத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக அரசலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று லட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி லட்சுமி(வயது 70). இவர் நேற்று முன்தினம் மாலை செஞ்சி அருகே அரசலாபுரத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக அரசலாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று லட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.